தேவி கருமாரி அம்மன் கோவிலில் நவராத்திரி மகோற்சவம்
ADDED :2122 days ago
நங்கநல்லுார்: நங்கநல்லுார், தில்லை கங்கா நகரில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி மகோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம், நேற்று முதல், 25ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு, கடந்த, 16ம் தேதி யாகசாலை வளர்த்து, ஸ்ரீசுத்த ஹோமம், அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.விழாவின் முதல் நாளான நேற்று மாலை, அம்பாள் பார்வதி அலங்காரத்தில் காட்சியளித்தார்.