உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்

சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்

 திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், கிழக்கு ரத வீதி லிங்கேஸ்வரர் கோயில்களில் சோமவாரத்தை முன்னிட்டு யாகத்துடன் 108 சங்குகள் வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நத்தம்: ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. மெய்கண்ட சித்தர் குகையில் 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர், மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !