உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை அமாவாசை ; சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை அமாவாசை ; சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்

 வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த கார்த்திகை அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறையில் பக்தர்கள் குவிந்திருந்த நிலையில் காலை 6:15 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில்இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !