பாண்டுரங்க பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :1847 days ago
பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், ரோகிணி நட்சத்திரத்தையொட்டி, திருமஞ்சனம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் சுவாமிக்கு பால், தயிர், பழம் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பாண்டுரங்கர், ரகுமாயி மற்றும் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.