உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேக்கிழார் குருபூஜை

சேக்கிழார் குருபூஜை

வத்திராயிருப்பு:சைவ சமயம் வளர்த்த 63 நாயன்மார்களில் ஒருவரான சேக்கிழார் பெருமான் முக்தியடைந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் குருபூஜை வழிபாடு நடந்தது. ஐவர் சன்னதியில் உள்ள சேக்கிழார் உருவச்சிலைக்கு , 18 வகை அபிஷேகம், தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. முடிவில் சேக்கிழார் இயற்றிய பெரியபுராண பாராயணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை பக்தசபா நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !