உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு

 பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் செங்கமலத் தாயாருக்கு பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:30 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள செங்கமலத்தாயாருக்கு சிறப்பு அபிேஷகமும், 5:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !