உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பறவை காவடி :பக்தர்கள் நேர்த்திக்கடன்

பழநியில் பறவை காவடி :பக்தர்கள் நேர்த்திக்கடன்

 பழநி:பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட பக்தர்கள் பறவைக் காவடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று பங்குனி உத்திர 10ம் நாள் திருவிழா நடந்தது. பக்தர்கள் தீர்த்தக்காவடி, அலகு குத்தி நேர்த்தி கடன் செய்து வருகின்றனர்.நேற்று சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களில் ஐந்துபேர் பறவை காவடியில் தொங்கியபடி உடல் முழுவதும் அலகு குத்தி மலையை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்குழுவில் 300க்கும் மேற்பட்டோர் கடந்த 38 ஆண்டுகளாக தொடர்ந்து பழநியில் தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !