அருணாசலேஸ்வரர் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு
ADDED :1632 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. உற்சவ நிறைவு நாளில் நேற்று ராஜகோபுரம் அருகே சூலம் ரூபத்தில், அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.