இவரே நிரந்தர நீதிபதி
ADDED :1913 days ago
அழகர்கோவிலின் காவல் தெய்வம் கருப்பண்ணசுவாமி. மிக சக்தி வாய்ந்த இவர் ‘பதினெட்டாம்படியான்’ என அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். இவரது சன்னதியை பக்தர்கள் நீதிமன்றத்திற்கு இணையாக கருகின்றனர். இவரை சாட்சியாக வைத்து முக்கிய விவகாரங்களை கிராம மக்கள் பேசித் தீர்க்கின்றனர். இந்த வகையில் புராணகாலம் தொட்டு இவர் நிரந்தர நீதிபதியாக திகழ்கிறார்.