ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோடை வசந்த உற்சவம்: 7 ம்நாள்
ADDED :1760 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் துவங்கி பக்தர்களின்றி நடந்து வருகிறது. வருடம் தோறும் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடக்கும் இந்த வசந்த உற்சவம், தற்போது ஊரடங்கு காரணமாக ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. இதனை முன்னிட்டு நடந்த ஏழாம் திருநாள் விழாவில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் அருள்பாலித்தனர். கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர். 10 நாட்கள் நடக்கும் வசந்த உற்சவம் மே 26 அன்று நிறைவடைகிறது.