உலகமே உங்கள் கைகளில்
ஆர்வத்தை துாண்டுகிறார் அவ்வையார்
* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகமே உங்கள் கையில்.
* பிறரது குற்றம், குறைகளையே ஆராய்பவனுக்கு உறவினர் என யாரும் இருக்க மாட்டார்கள்
* நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும்.
* மனசாட்சியை புறக்கணிப்பதைவிட பெரிய வஞ்சகம் வேறில்லை.
* உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக பார்க்காதீர்கள்.
* அடங்காத கோபம் குடும்பத்தின் அமைதியை கெடுத்து விடும்.
* கட்டிய கணவனையே பழிதுாற்றும் பெண் எமனுக்கு நிகரவாள்.
* சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது.
* அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது அவசியம்.
* இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவு.
* சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பம் தரும்.
* உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைக்கும்.
* நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவ வாழ்வின் அடையாளம்.
* பிறருக்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து வாழ்வது சிறந்தது.
* நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.