கடவுளின் அருளை பெற...
ADDED :1640 days ago
வழிகாட்டுகிறார் மூதறிஞர் ராஜாஜி
* உள்ளம் உருகி வழிபட கடவுளின் அருள் கிடைக்கும்.
* இன்று செய்த குற்றங்களை மீண்டும் செய்யாதிருக்க துாங்கும்முன் கடவுளிடம் வேண்டுங்கள்.
* நம் அருகேயே கடவுள் எப்போதும் இருக்கிறார்.
* கவலைப்படுவதால் பிரச்னை தீராது. அறிவின் துணையுடன் வெற்றி காணுங்கள்.
* துன்பத்தை உணர்ந்தவனே சுகத்தின் அருமையை உணர்வான்.
* கடவுளை தாயாக கருது.
* தியானம் செய்ய, மனம் ஒருமுகப்பட்டு இருந்தால் போதும்.
* யாரிடமும் உயர்வு, தாழ்வு காட்டாதே.
* பிழைகளைத் திருத்திக் கொள்வதால் அவமானம் நேராது.
* தவறான ஆசைகள் முளைக்கும்போதே அகற்றுங்கள்.
* கோயிலைப் போல உள்ளம் துாய்மையாக இருக்க கடவுளிடம் வேண்டுங்கள்.
* பலனை எதிர்பார்த்து பக்தி செலுத்தாதே.