தடை தகர்க்கும் மரகதம்
ADDED :1641 days ago
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திருநோக்கிய அழகியநாதர் என்னும் பெயரில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். துளசி இலையால் சிவபெருமானை மகாலட்சுமி பூஜித்த தலம் இது. இதனடிப்படையில் திங்கட்கிழமையில் சுவாமிக்கு துளசி அர்ச்சனை நடக்கிறது. பிரதோஷ நாளில் இங்குள்ள இரண்டு மரகத லிங்கங்களுக்கு பூஜை நடக்கும். இதை தரிசித்தால் திருமணத்தடை அகலும். கருத்துவேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.