வாசலிலேயே வரவேற்பு
ADDED :1780 days ago
வரலட்சுமி விரதத்தன்று வீட்டு வாசலின் நிலைப்படிக்கு கற்பூரம் காட்டி ‘மகாலட்சுமித் தாயே! எங்கள் இல்லத்துக்கு வருக’ என வரவேற்க வேண்டும். வீட்டுக்குள் வந்த மகாலட்சுமி கலசத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். முதலில் விநாயகரையும், பின்னர் சுமங்கலி பாக்கியம் நிலைக்க வரலட்சுமியையும் வழிபட வேண்டும்.