உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த  அரிதாரிமங்கலத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய தவ்வை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செங்கம் அடுத்த அரிதாரிமங்கலம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய தவ்வை சிற்பம் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “செங்கம் அடுத்த அரிதாரிமங்கலம் ஏரிக் கரையின் வடக்கு பகுதியில் 3 அடி உயரமும், 3 அடி நீளமும் உள்ள தவ்வை, மூத்ததேவி சிற்பம் இருந்தது. இதனை, கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் ஆய்வு செய்தார்.

அவரது ஆய்வில், அந்த கல்வெட்டில் ஏரியில் இருந்து வயல்களுக்கு நீர் பாய உதவும் தூம்பிணையும், கேட்டையாரையும் திருவண்ணா மலையைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்து கொடுத்துள்ளார் என்பது செய்தியாகும். மேலும், தவ்வை சிற்ப அமைதியும் வேறுபட்டுள்ளது. பொதுவாக, கால்களை பரப்பித் தொங்கவிட்டு பெருத்த வயிறுடன் தவ்வை காட்டப்படுவாள். ஆனால், இந்த சிற்பத்தில் சுகாசனத்தில் அழகிய உருவமாக காட்டப்பட்டுள்ளாள். அவளுடைய மகனாக கருதப்படும் மாந்தன், மாட்டு முகத்துடன் வலதுபுறம் காட்டப்படுவது மரபு. இங்கு இடதுபுறம் காட்டப்பட்டுள்ளான். மன்னர் பெயர் இல்லாததால், கல்வெட்டின் காலம் எழுத்தமைதியைக் கொண்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தது” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !