உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாலிங்க சுவாமி குருபூஜை விழா

மகாலிங்க சுவாமி குருபூஜை விழா

பாலமேடு: பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குருபூஜை விழா நடந்தது. மடத்தில் கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து விநாயகர் கோயிலில் தீபாரதனை நடந்தது. ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்தனர். சாதுக்களுக்கு சொர்ண் தானம், வஸ்திர தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !