சிறப்பு அலங்காரத்தில் காரமடை ரங்கநாதர் அருள்பாலிப்பு
ADDED :1549 days ago
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் திருநாளில் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.