சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :1511 days ago
சிவகாசி: சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமை பண்டுக்கு பாத்தியப்பட்ட சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சொக்கர் மீனாம்பிகைக்கு லட்சார்ச்சனை புஷ்பாஞ்சலி மகோற்சவ நிகழ்ச்சி நடந்தது. காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஹோமம், லட்சார்ச்சனை, தீபாரதனை ,அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.