ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா
ADDED :1302 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை யொட்டி யுகாதி விழா நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் 12ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு யுகாதி விழா சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடந்தது. அதன்பின் தீர்த்தம், சடாரி ஆசிர்வாதம், கோஷ்டி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.