மடவார்வளாகம் சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி
ADDED :1413 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு பஜனை, இசை அர்ப்பணம், மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மல்லி யஷஸ் பள்ளி கமிட்டி உறுப்பினர் சுதாகுமார், தலைமை ஆசிரியை லட்சுமிபிரியா மற்றும் மாணவர்கள், பள்ளி அலுவலர்கள் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனர். பஜனை மற்றும் இசை அர்ப்பணத்தில் பங்கேற்றனர்.