உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதர்சன ஜெயந்தி விழா பொள்ளாச்சி கோவில்களில் வழிபாடு

சுதர்சன ஜெயந்தி விழா பொள்ளாச்சி கோவில்களில் வழிபாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சுதர்சன ஜெயந்தி விழா நடந்தது.

பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், சுதர்சன ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று மாலை, 5:30 மணிக்கு, சக்கரத்தாழ்வாருக்கு பால், இளநீர், தயிர், துளசி பொடி, அரிசி பொடி, மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர் என ஒன்பது வகையான அபிேஷகம் நடைபெற்றது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சுதர்சன ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !