காளஹஸ்தி வர சக்தி விநாயகர் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1497 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயசுதா குடும்பத்தினர் சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதான திட்டத்திற்காக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடையை காசோலையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி யிடம் காசோலையாக வழங்கினர். இவர்களுக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடு செய்ததோடு விநாயகர் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசவங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.