உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை ஆடி அமாவாசை : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் தீவிரம்

நாளை ஆடி அமாவாசை : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் தீவிரம்

நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை, ஏவல், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு, தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆண்டுதோறும் வருகை தருவர். அந்த வகையில், நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் வருகை தர கூடும் என்பதால், நவபாஷாண கடற்கரையில் இருந்து பக்தர்கள் நீராடும் கடல் பகுதி வரை இந்து அறநிலை துறை சார்பில், பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு, உள்ளே செல்ல மற்றும் வெளியேற தனித்தனி பாதைகள் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !