பாதூர் பிரத்யங்கிராதேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :1178 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கிராதேவி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரத்யங்கிராதேவி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 10.30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டது. இந்த யாக குண்டத்தில் பால், தயிர், நெய், பழங்கள், பிரசாதங்களால் யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் புடவைகள், வளையல்கள், தாலி ஆகியவை யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி எழுதிய வெற்றிலைகள் சாற்றப்பட்டன. பின்னர் தீபாராதனை வழிபாடு நடந்தது. ஆடி அமாவாசையொட்டி பிரத்யங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.