சோனை அழகாயி அம்மன் கோயில் திருவிழா; உரலில் எள் இடித்து வழிபாடு
ADDED :24 minutes ago
எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சோனை அழகாயி அம்மன் கோயில் ஆடித் திருவிழா நடந்தது. இதையொட்டி கோயில் பூசாரி விரதம் இருந்தும் பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு உரலில் எள் இடித்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடந்தது. பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.