மூலை அனுமார் கோவிலில் மகாளய அமாவாசை சிறப்பு அலங்காரம்
ADDED :1174 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மூலை அனுமார் கோவிலில் நேற்று 25ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு மூலை அனுமாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மகாளய அமாவாசையை முன்னிட்டு பழங்களான சிறப்பு அலங்காரத்தில் மூலை அனுமார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.