சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1143 days ago
அலங்காநல்லூர், அலங்காநல்லூர், அருகே ஆதனுரர் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜைகளை தொடர்ந்து மணிகண்ட சுவாமிகள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சீலைக்காரி அம்மன் வழிபடும் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.