ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பவுர்ணமி மகா ஆரத்தி
ADDED :1431 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா தீபா ஆர்த்தி நடந்தது. சமுத்திர ஆர்த்தி அமைப்பு சார்பில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் மகா தீப ஆர்த்தி நடைபெறும். அதன்படி நேற்று புரட்டாசி பவுர்ணமி யொட்டி மகா தீப ஆரத்தி குழுவினர் வேத விற்பன்னர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபா ஆர்த்தி நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.