உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

திருநள்ளாறு கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர்.சனீஸ்வர பகவான் கோவில் நேற்று முன்தினம் சூரசம்ஹாராம் நிகழ்ச்சி நடந்தது இக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகப் பெருமாளுக்கு பலவகையான திரவாங்களால் ஆபிஷேகம் நடைபெற்றது.பின் அம்பாளிடம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வேல் வாங்கு நிகழ்ச்சி நடந்தது. பின் கோவிலில் முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் முன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார்.பின் முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து மகா தீபாரதனைகள் நடந்தது இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதுப்போல் காரைக்கால் கைலாசநாதர் கோவில். பார்வதிஸ்வரர் கோவில் திருப்பட்டினம் இராஜசோளீச்சுரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !