உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 15ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

15ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தை ஒட்டிய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி வட்டம் கீழக்கொடும்பலூரில் பழமையான எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கருப்பு ராஜா, பாண்டியநாடு பண்பாட்டு மைய கள ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஸ்ரீதருக்கு தகவல் தெரிவித்தார். ஆய்வுக்குப் பின் அவர்கள் கூறியதாவது; கல்வெட்டு கீழக்கொடுமலூர் வடக்கு பகுதி பகவதி அம்மன் கோயிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்தது. இதனால் எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகிறது. ‌ இதன்படி கல்வெட்டில் ஒன்பது வரிகள் இடம் பெற்றுள்ளன அவற்றில் சில மற்றும் தெளிவாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அந்தராயம் உபயம் ல்லூர் மேற்கே காடு உட்பட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட, என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது கல்வெட்டின் ஆரம்பமும், முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும், திசையும், இடத்தின் பெயர் இருப்பதால் நான்கு எல்லையை குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான அந்தராயம் உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கோயிலுக்கு விஜய நகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதலாம். இந்த எழுத்தின் அமைப்பை பார்க்கும் போது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !