அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழா: பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
ADDED :1126 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேதராய் சுப்பிரமணியன், உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து இரண்டாம் பிரகாரத்தில் வழியாக மாட வீதிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.