உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகத்தான செயலை செய்யலாம் வா!

மகத்தான செயலை செய்யலாம் வா!


அழைக்கிறார் விவேகானந்தர்

* பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம்.
* உண்மையின் பாதையில் செல். வெற்றி உனக்கே.
* உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளே உள்ளது.
* உலகம் போல உன்னுடைய இதயத்தை பெரிதாக்கு.
* மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன்.
* உனது பலவீனமே உனக்கு துன்பமாக அமைகிறது.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
* பலமே வாழ்வு. பலவீனமே மரணம்.
* கீழ்ப்படிய கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக வரும்.
* எப்போதும் உற்சாகமுடன் செயல்படு. இதுவே வெற்றியின் முதல் அறிகுறி.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே ஒருவர் எழுச்சி பெறமுடியும்.
* பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுள் மகிழ்ச்சி அடைவார்.
* நீ செய்யும் தவறுகள்தான் உனக்கு வழிகாட்டும் தெய்வமாக இருக்கும்.
* அன்பின் மூலம் செய்யும் செயல் மகிழ்ச்சி தரும்.
* சாதனை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
* உடல், மன பலவீனத்தை உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
* பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
* ‘நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு’ என்று நினைத்துக்கொள்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !