திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரு விழாக்கள்
ADDED :1171 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான தென்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் நேற்று இரு விழாக்கள் நடந்தது. காலையில் மூலவர் முன்பு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை, தீபாராதனை முடிந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு 108 லிட்டர் பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி பூஜை நடந்தது.