உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருத்தணி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

மொத்தம், 12 நாட்கள் நடக்கும் விழாவில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் காலை, இரவு நேரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், நடப்பாண்டின் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது.நேற்று, காலை 7:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார். அதை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு உற்சவர் கொடி மரத்தின் எதிரே உற்சவர் முருகப் பெருமான் வந்தார். சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் துணை ஆணையர் விஜயா, கண்காணிப்பாளர் சித்ராதேவி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 3ம் தேதி மரத்தேர் திருவிழா, 4ம் தேதி வள்ளி திருமணம் நடக்கிறது. மார்ச் மாதம், 6ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !