திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பாலிகை விடும் நிகழ்ச்சி
ADDED :1092 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தில் பாலிகை விடும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இன்று திருக்கல்யாண உற்சவத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சிக்காக, கோவிலில் இருந்து தாமரைக் குளத்திற்கு ஆடியபடி சென்ற உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து பாலிகை விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.