உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள் வழிபாடு

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள் வழிபாடு

மயிலாடுதுறை: உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தர்மபுரம் ஆதீனம் பங்கேற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உலகப் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.2000 பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 1997 ஆம் ஆண்டு மாசி மாதம் 26- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழாவை முன்னிட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் 3 -யாக குண்டங்கள் அமைத்து 20- சிவாச்சாரியார்கள் திருமுறை பாராயணம், வேத பாராயணம், மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க புர்ணாகதி செய்யப்பட்டு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து. அதனைத் தொடர்ந்து அபிராமி அம்மன்,அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !