காளஹஸ்தி சிவன் கோயிலில் உத்திரகாண்ட் சாதுக்கள் தரிசனம்
ADDED :871 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாதுக்கள் பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று புதன்கிழமை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார் ஞானப்பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள மேதா குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சுவாமி அம்மையார் களின் தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்*. இதில் கோயில் அதிகாரிகள் சதீஷ் மாலிக், நாகபூஷன், கோயில் ஆய்வாளர் சுதர்சன் நாயுடு,.சுதர்சன் ரெட்டி, வேத பண்டிதர்கள் உடன் இருந்தனர்.