/
கோயில்கள் செய்திகள் / வைகாசி அமாவாசை : பேரூர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
வைகாசி அமாவாசை : பேரூர் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
ADDED :896 days ago
கோவை: பேரூர் ஆற்றங்கரையில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு படையல் வைத்து திதி கொடுத்து வழிபட்டனர்.
கோவை, பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இன்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் காய்கறி, சாதம் படையல் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர்.