சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: கரகம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
ADDED :962 days ago
கோவை: ராம் செட்டிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள் பாலித்தார்.இதில் பக்தர்கள் அம்மனை வேண்டி தலையில் சக்தி கரகம் எடுத்து வந்தனர். இந்த நிகழ்வில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.