வைகாசி பௌர்ணமி; அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1182 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்கோவிலில் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கப்பட்டது. ராஜகோபுரம் அருகே, அமைக்கப்பட்ட சிறப்பு பந்தலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.