உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல்

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காஞ்சிபுரம், புகழ்பெற்ற அத்திவரதர் வரதராஜப் பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான வியாழக்கிழமை காலை கருட சேவை உற்சவம், அதனை தொடர்ந்து இரவு ஹானுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றது. அப்போது சங்கரமடம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடினர். இது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து சாமிக்கு படைக்கப்பட்ட பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடியபடி வந்த நிலையில், எதற்காக தென்கலை பிரிவினருக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !