பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி1ல் லட்சார்ச்சனை துவக்கம்
ADDED :893 days ago
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி முதல் நாள் அன்று லட்சார்ச்சனை துவங்க உள்ளது. பழநி முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை.17, ஆடி மாதம் முதல் நாளில் பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை சாயரட்சை பூஜைக்கு பின் லட்சார்ச்சனை துவங்கவுள்ளது. இந்நிகழ்ச்சி ஆக., 10 வரை தொடர்ந்து நடைபெறும். மேலும் ஜூலை 21 பெரிய நாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ஜூலை 28 இல் மீனாட்சி அலங்காரம், ஆக., 4ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக., 11 இல் தங்க கவச அலங்காரம் நடைபெறும். அதன்பின் வெள்ளித்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறும். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.