உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பான நாள்

சிறப்பான நாள்

ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம். இதனால் ஆடிப்பூரம் சிறப்பு பெற்றது. இதை வைணவப் பெரியவரான மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இப்படிச் சொல்கிறார்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு

பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நட்சத்திரத்தின் சிறப்பு வேறொரு நாளுக்கு உண்டோ? ஆண்டாளுக்கு சமமாக ஒருவர் உண்டென்றால் இந்த நாளுக்கும் சமமாக ஒரு நாள் இருக்கக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !