அழகர் கோவிலுக்கு இலுப்பூர் காவடி
ADDED :22 hours ago
சிங்கம்புணரி: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடி கடைசியில் அழகர் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
நேற்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 51வது ஆண்டாக சிங்கம்புணரி வழியாக காவடி துாக்கி ஊர்வலமாக வந்தனர். சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருமுருகன் வார வழிபாடு சபை சார்பில் அதன் குருசாமிகள் தலைமையில் ஆகஸ்ட் 14ல் இலுப்பூர் பொன்வாசி நாதர் கோயிலில் வழிபாடு நடத்தி புறப்பட்டனர்.
ஆகஸ்ட் 17ல் அழகர்கோவிலை அடைகின்றனர். அங்கு முருகனுக்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.