ஆவணி சோமவாரம்; ஞான ஈஸ்வரர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :936 days ago
கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.