தேய்பிறை பஞ்சமி; வாராகி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :986 days ago
கோவை; சாய்பாபா காலனி, கே.கே புதூர் சின்னம்மாள் வீதியில் உள்ள வாராகி அம்மன் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாராகி அம்மன் கோவிலில் ஆவணி தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.