உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு மகாலிங்க சுவாமி கோயிலில் குருபூஜை விழா

பாலமேடு மகாலிங்க சுவாமி கோயிலில் குருபூஜை விழா

பாலமேடு; பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 64ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. மடத்தில் கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மேளதாளத்துடன் மாலை விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்தனர். பின் பெரிய மடத்திற்கு சென்று தீர்த்த அபிஷேகம், பஜனைகள் நடந்தது. சாதுக்களுக்கு சொர்ணதானம், வஸ்திரதானம், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை, சுவாமிமலை, சதுரகிரி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட சாதுக்கள் வந்திருந்தனர்.ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !