ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :630 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை நாளான இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தில் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனத்தில் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களையும் நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோவில் அக்னி தீர்த்தம் கடற்கரை வரை போக்குவரத்து நெரிசலும், கோயில் நான்கு ரதவீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.