உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம் கோலாகலம்

ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம் கோலாகலம்

காரைக்கால்; காரைக்காலில் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரும்மோற்சவத் விழாவை முன்னிட்டு திருத்தேர் திருவிழா நடைபெற்றது. காரைக்கால் திருமலை ராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரும்மோற்சவத் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி அனுக்ஞை விக்வேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரிய ரக்ஷாபந்தனம் பஞ்சமூர்த்தி அபிஷேகம் நடைபெற்றது.கடந்த 15ம் தேதி மாசிமகத்தையொட்டி ரிஷபக்கொடி வீதியுலா நடைபெற்றது. அன்று சூரிய பிறையில் சுவாமி வீதியுலா,சந்திபிறையின் சுவாமி வீதியுலா.தியாகராஜர் புறப்பாடு (உன்மத்த நடனம்) வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி பிரகாரம் வலம் வருதல், சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை 24ம் தேதி புஷ்பப் பல்லாக்கு, 25ம் தேதி தெப்போற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !