திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் அன்னதானம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து திருநள்ளாறுக்கு வருகின்றனர்.திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தங்கதேர், அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவிலில் ஐந்து இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம் உண்டியலும் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று கோவில் வளாகத்தில் தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணிகள் துவங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் காணிக்கை பணம் அனைத்து வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தார்.